• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘அது நான் தான் ஆனால் குரல் என்னுடையது இல்லை’ – எம்.எல்.ஏ., சரவணன்

June 13, 2017 தண்டோரா குழு

“வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல” என்று ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ ஒன்று நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து எம்.எல்.ஏ. சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல. நான் முன்பு எப்போதோ அளித்த பேட்டியில் குரலை மட்டும் மாற்றி டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். பேரம் பேசியதாக வெளியான அந்த வீடியோவில் உண்மை இல்லை.

கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு குறித்து நான் பேசவில்லை. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிச்சயமாக வழக்கு தொடர்வேன்” என்றார்.

மேலும் படிக்க