March 22, 2019 தண்டோரா குழு
மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் என ஜெ.தீபா கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக 40 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியுள்ளது. இதற்கிடையில், தொண்டர்களின் விருப்பம் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாவும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் ஜெ.தீபா தெரிவிருந்தார். இந்நிலையில், இன்று திடீரென அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா,
அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது என சேலத்தில் நடந்த பேரவை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை; மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர். அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும்; அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரை மேற்கொள்வேன் எனக் கூறியுள்ளார்.