• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக பொதுக்குழு கூட்டத்த்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

September 12, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (செப் 12) நடைப்பெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரையாற்றினார்.தீர்மானத்தை ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்தது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட மேலும் சில முக்கிய தீர்மானங்கள்

இரட்டைஇலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.ஜெயலலிதா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள்.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அரசுக்கு பாராட்டு.

இரு அணிகள் இணைந்த நிலையில் ஒரே கட்சியாக கொண்டு வர வேண்டும். ராமர், லட்சுமணர் போல் நாட்டை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீட்டு எடுத்துள்ளனர் என்றார்.ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அ.தி.மு.க.வில் இனி ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மேலும்,அதிமுகவின் நிரந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான்.அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே இல்லை என சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க