• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கூட்டணியில் தமாகா-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

March 13, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா-வுக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுவுடனான கூட்டணி ஒப்பந்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ்,

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.மா.கா-வுக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. 21 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு த.மா.கா ஆதரவு அளிக்கும் என்றார்.

மேலும் படிக்க