May 20, 2019 தண்டோரா குழு
அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
“சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். தற்போது அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராகவும் பெருந்துறை எம்.எல்.ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் தான் வகித்த அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் முதல்வர் பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாகவும் அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து வெங்கடாசலம் விலகினால், சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு மேலும் பலம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.