• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவிற்கு அமமுக சவால் விடுவது கடல்வற்றி கருவாடு சாப்பிடுவது போன்றது – அமைச்சர் ஜெயக்குமார்

February 7, 2019 தண்டோரா குழு

அதிமுகவிற்கு அமமுக சவால் விடுவது கடல்வற்றி கருவாடு சாப்பிடுவது போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக, அமமுக தவிர எந்தக் கட்சிகள் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்புவிடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் வர்தா மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத சிறந்த திட்டங்களையும் கூட அதிமுக அரசு நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அமமுகவை லெட்டர் பேட் கட்சியாக தான் பார்க்கிறோம்; ஆர்கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பெற்ற தற்காலிக வெற்றி அமமுகவுடையது சவால் விடுவதற்கெல்லாம் தகுதியற்றது அமமுக. அதிமுகவிற்கு அமமுக சவால் விடுவது கடல்வற்றி கருவாடு சாப்பிடுவது போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க