• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

 அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா – டிடிவி தினகரன்

March 17, 2018 தண்டோரா குழு

அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

கடந்த 15ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி  தினகரன் தனது அமைப்பிற்கான பெயரையும், கொடியையும் அறிவித்தார். இதற்கிடையில் இன்று நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரன் அறிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற  பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை. அண்ணாவும் , திராவிடமும் இல்லாத  டிடிவி  அணியில் நீடிக்க விரும்பவில்லை.நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை. இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்,

ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.  அண்ணாவையும், திராவிடத்தையும் நான் அவமதித்தது போல் நாஞ்சில் சம்பத் பேசி வருகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியாரின் மொத்த உருவம் ஜெயலலிதா.  தேர்தல் ஆணையத்தில் கொடுத்த கட்சி பெயரில் திராவிடம் உள்ளது.  பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது என்று தினகரன் கூறினார்.

மேலும்,  தேர்தல் ஆணையத்தில் கட்சிக்காக 3 பெயர்களை கொடுத்ததாகவும், அதில் ஒரு பெயரை தேர்வு செய்ததாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் டிடிவி.தினகரன் கூறினார். மேலும் தொண்டர்கள் என்னை தலைவராக உருவாக்கி வருகின்றனர் என்றார்.

மேலும் படிக்க