September 22, 2017
தண்டோரா குழு
தினகரன் அணியில் இருந்த தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன் முதலமைச்சருடன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இரட்டை இலை சின்னத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தினகரன் அணியில் உள்ள தென்காசி எம்பி வசந்தி முருகேசன் எடப்பாடி அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
வசந்தி முருகேசன் அணி மாறியதால் தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.