September 24, 2019 தண்டோரா குழு
அடிப்படை வசதிகள் செய்து தராத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி உயர்த்திய தேர்வு கட்டணத்தை ரத்து செய்வது, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் முறையான கழிவறை வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்டவை பிரதான கோரிக்கைகளாக இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் மேசை உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்த உள்ளமாகவும், இதனை சரி செய்ய கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.