• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை- போக்குவரத்து காவல்துறை

August 30, 2017 தண்டோரா குழு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வாகனங்களை ஓட்டுவோர் அசல் ஓட்டு உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க