• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம்

January 8, 2019 தண்டோரா குழு

அகில இந்திய மகிளா காங்., தேசிய பொதுச்செயலாளராக சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டார்.

சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டு தேசிய அளவில் புகழ் பெற்றவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின் அதிமுக நிகழ்சிகளில் கலந்து கொண்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், அப்ஸரா ரெட்டி அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். மேலும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார்.

மேலும் படிக்க