• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

November 19, 2021 தண்டோரா குழு

தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

அகில இந்திய தொழிற் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், தனித்தேர்வர்களாக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள தொழிற்பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

முதல் பிரிவு, மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 14ம் தேதி கருத்தியல் தேர்வும், 15ம் தேதி செய்முறை தேர்வும் சென்னை கிண்டி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செயல்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இதில், தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் பிரிவு விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதுதொடர்பான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க