• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக குப்பைத் தொட்டியில் ரூபாய் நோட்டுகளை வீசிய ஆட்டோ டிரைவர் கைது

November 12, 2016 தண்டோரா குழு

மதுராந்தகத்தில் ஃபேஸ்புக் மோகத்தால் ரூ. 500 நோட்டுகளைக் குப்பைத் தொட்டியில் வீசிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமார். கடந்த 8-ம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த போது, இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தீவிரமாகக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபேஸ்புக் மோகத்தால் ஃபேஸ்புக்கில், குப்பையில் பணம் இருப்பது போன்று போட்டோ போட்டு ‘லைக்’ வாங்க விரும்பிய சாந்தகுமார், சுமார் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை குப்பையில் கொட்டினார்.

பின்னர், அதை அப்படியே தனது செல்போனில் புகைப்படம் எடுத்துவிட்டு, அப்பணத்தை மீண்டும் எடுக்க முயன்றார். அப்போது போலீசாரிடம் சிக்கினார். போலீசார் ஆட்டோ ஓட்டுநர் சாந்தகுமாரரைக் கைது செய்தனர்.

மேலும் படிக்க