• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்

April 10, 2017 தண்டோரா குழு

திரைப்படத்தை விமர்சியுங்கள் ஆனால் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீகள் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள படம் நெருப்புடா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், தனுஷ், விஷால், லாரன்ஸ், பிரபு, கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த்,

அண்ணாமலை படத்தில் நடிக்கும் போது சிவாஜியை மனதில் வைத்தே நடித்தேன். சிவாஜி சார் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு போட்டியே இருந்ததில்லை. தனது அப்பா, தாத்தா பெயரை காப்பற்ற வேண்டிய பொறுப்பு விக்ரம்பிரபுக்கு உள்ளது என்றார்.

மேலும், ஊடகங்கள் சினிமாவை விமர்சிக்கலாம் ஆனால் யார் மனதையும் புண்படுத்தாத அளவிற்கு வார்த்தையில் கவனம் வேண்டும்.அதைப்போல் தயாரிப்பாளர்களும் படம் தயாரிக்கும் போது படத்தில் பணியாற்றிய அனைவரும் லாபம் பெறவேண்டும் என நினைக்க வேண்டும் தவிர இலாபம் அடைய வேண்டும் என நினைக்க கூடாது என்றார்.

படத்தில் விக்ரம் பிரபு ரஜினிகாந்த் ரசிகராகவும் தீயணைப்பு வீரராகவும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க