• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வந்தே பாரத் ரயிலை சென்னையிலிருந்து கோவைக்கு மாலை 5 மணிக்கு இயக்க கோரிக்கை

March 30, 2023 தண்டோரா குழு

சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் இயக்கப்படும் ரயிலை மாலை 5 மணி அளவில் இயக்க வேண்டும் என போசியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

சென்னை-கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது மிகவும் மிகழ்ச்சியான செய்தி. இதன் மூலம் பல்வேறு தொழில்நிறுவனங்களை சார்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். கோவையில் இருந்து சென்னைக்கு தொழில் அலுவல் நிமித்தமாக தினமும் பல நூறு சென்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2.20 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.20 மணிக்கு பதிலாக மாலை 5 மணி அளவில் ரயிலை இயக்கினால் சென்னையில் இருந்து அலுவல் பணிகளை முடித்துவிட்டு கோவை வரும் பல ஆயிரம் தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். ரயில்வே துறை எங்களது கோரிக்கையை ஏற்று நேரத்தை மாற்றி அமைத்து தந்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க