- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் இயக்கப்படும் ரயிலை மாலை 5 மணி அளவில் இயக்க வேண்டும் என போசியா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
சென்னை-கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது மிகவும் மிகழ்ச்சியான செய்தி. இதன் மூலம் பல்வேறு தொழில்நிறுவனங்களை சார்ந்தவர்கள் பயன்பெறுவார்கள். கோவையில் இருந்து சென்னைக்கு தொழில் அலுவல் நிமித்தமாக தினமும் பல நூறு சென்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு மதியம் 2.20 மணிக்கு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.20 மணிக்கு பதிலாக மாலை 5 மணி அளவில் ரயிலை இயக்கினால் சென்னையில் இருந்து அலுவல் பணிகளை முடித்துவிட்டு கோவை வரும் பல ஆயிரம் தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். ரயில்வே துறை எங்களது கோரிக்கையை ஏற்று நேரத்தை மாற்றி அமைத்து தந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு