• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை – விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

May 20, 2020 தண்டோரா குழு

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ளது. இதனால், விமான சேவை முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“நிலைமைக்கேற்ப மே 25, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும். தயார் நிலையில் இருக்கும்படி அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பயணிகளை அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் தனியாக வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க