• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் 900 களப்பணியாளர்கள்

January 13, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் 900 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் இந்த களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். தண்ணீரில் அபேட் மருத்துகளை ஊற்றுவர்கள். அதன் பின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று சுற்றி 500மீட்டர் தூரம் வரை மாஸ் கிளினிங் என சொல்லக்கூடிய சுகாதார பணியில் ஈடுபடுவார்கள்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாநகராட்சி பகுதியில் 900 களப்பணியாளர்கள் வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்,’’ என்றார்.

மேலும் படிக்க