• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடர் மழையால் வேகமாக நிறைந்து வரும் வாளையாறு அணை – தமிழக – கேரள விவசாயிகள் மகிழ்ச்சி

August 9, 2020 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணை நிரம்பி வருவதால் இரு எல்லை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக – கேரள எல்லையான வாளையாறில், வாளையாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்தம் கொள்ளளவு 64 அடி, இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் கேரள பாசனத்திற்கு செல்கிறது. நீர் தேக்கப்பகுதி தமிழக எல்லையில் அமைந்துள்ளதால் வாளையாறு அருகே உள்ள மாவூத்தம்பதி, நவக்கரை, உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து காணப்படும். வரட்சியால் வாளையாறு அணையில் நீர் வற்றி மிக குறைவான நீர் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையாலும், எட்டிமடை, க.க.சாவடி பகுதியில் பெய்த மழையால் வழிந்த நீரால் கடந்த மூன்று நாட்களில் அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இன்னும் இரண்டு தினங்களின் அணையின் மொத்த கொள்ளளவான 64 அடியும் நிறையும் தருவாயில் அணை உள்ளது. அணையில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் தமிழக கேரள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க