• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் 16-ஆவது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா

November 3, 2025 தண்டோரா குழு

கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில், 16 வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ்.தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பள்ளி முதல்வர் பூனம் சியால் பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்து அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனரும் (DRDO), ஸ்பிக் அமைப்பின் இயக்குனருமான டாக்டர் M. மாணிக்கவாசகம் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தலைவர்களால் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் (Global Leaders Education Summit) இந்தியாவிலேயே சிறந்த பள்ளியாக ‘தி கேம்போர்டு சர்வதேச பள்ளி’ அங்கீகரிக்கப்பட்டதற்காக பள்ளி நிர்வாகத்தை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.

மக்களின் ஜனாதிபதி என போற்றப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் தாம் பணியாற்றியதை நினைவு கூர்ந்து நெகிழ்ச்சி அடைந்தார்.மாணவர்கள் முயற்சிகளை கைவிடாமல் வெற்றி பெற வேண்டும் என்று கூறிய அவர்,கடின உழைப்பும்,பயிற்சியும் இருந்தால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 2024 -25 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இணைந்து ஒருங்கிணைத்த இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை பார்வையாளர்களாக வந்த பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

மேலும் படிக்க