• Download mobile app
05 Mar 2026, ThursdayEdition - 3676
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுகவுக்குப் பதிலடி கொடுத்த விஜயகாந்த்.

March 30, 2016 முகமது ஆசிக்

வட சென்னை தேமுதிக மாவட்டச் செயலாளர் யுவராஜ் இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

யுவராஜ் கட்சி தாவிய அடுத்து சில மணி நேரத்தில் வடசென்னை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்தார் கேப்டன்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வடசென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக கு.நல்லதம்பி எம்.எல்.ஏ., கழக இளைஞர் அணி து.செயலாளர், மு.தளபதி,

தலைமை செயற்குழு உறுப்பினர், ப.மதிவாணன், ஆகியோர் இன்று முதல் நியமனம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும்,

முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யுவராஜ் கட்சி தாவிய அடுத்து சில மணி நேரத்தில்வடசென்னை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை அறிவித்து திமுகவுக்கு பதிலடி கொடுத்து தேமுதிகவின் பலத்தை காட்டியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

மேலும் படிக்க