• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோலையார் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி

October 20, 2023 தண்டோரா குழு

வால்பாறை சோலையார் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு மலை தொடர்ச்சியின் ஒரு பகுதியான வால்பாறை சுற்றுலாத் தலமாகும். இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.இவர்கள் வால்பாறை அடுத்துள்ள சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றதால் 5 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து, இது குறித்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய 5 பேர் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில்,தனுஷ்,அஜய்,வினித்,சரத்,
நபீல் அரசாத் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க