• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பார்க் தொழில்நுட்ப கல்லூரியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ZERO G – 25 நிகழ்ச்சி !

May 10, 2025 தண்டோரா குழு

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் பொறியியல் கல்லூரிகளான பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (PCET) பார்க் தொழில்நுட்ப கல்லூரிகளின் (PCT) இரண்டு நாள் கலை திருவிழாவான,ஆண்டு விழா 2025- ZERO G வெகு விமர்சையாக 09 மே 2025 மற்றும் 10 மே 2025 அன்று நடைபெற்றது.

இந்த கலைவிழாவில் 21 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்தனர். Project Expo, Short Film, Drawing, E Sports, Photography, Code Debugging, Code and Answer, Anime Quiz, Fashion Shop ad Cosplay, Singing, Mime, Reels Making போன்ற 30க்கும் மேலான போட்டிகள் நடைபெற்றன.

முதல் நாள், திரைப்படத்துறையில் சாதித்து வரும் பின்னணி பாடகர்கள் ஆதித்யா RK மற்றும் ரேஷ்மா S கலந்து கொண்டு தங்களது குரல் வளத்தால் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

இரண்டாம் நாள் நிறைவு விழாவுக்கு பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr.அனுஷா ரவி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக கமாண்டர் அரவிந்தன் RP (ஓய்வு), இந்திய கடற்படை மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கௌரவ விருந்தினராகவும், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

Dr.அனுஷா ரவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ZERO G குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நாம் இரண்டு ஆண்டுகளாக ராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கி வரும் கல்வி கட்டண சலுகையை மீண்டும் அறிவிக்குமாறு கமாண்டர் அரவிந்தன் அவர்களை கேட்டுக் கொண்டு வெளியிட்டார்.

கமாண்டர் அரவிந்தன் தனது உரையின் போது,

கமாண்டர் அரவிந்தன் தற்போது உள்ள போர் சூழ்நிலையில் ராணுவ வீரர்களின் நிலைமைகளை விளக்கினார்.மேலும் அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் அவர்களை மதிக்குமாறும்,எல்லையில் நமது நாட்டைக் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும் நலமுடன் திரும்பி வரவும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரியா வாரியா்ர உடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வு உற்சாகமாகவும் சுவையானதாகவும் அமைந்திருந்தது.இந்தக் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும் இந்த கலை விழாவின் போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது.

மேலும் படிக்க