• Download mobile app
23 May 2026, SaturdayEdition - 3755
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் இரண்டு மாதத்திற்கு பின் நடந்த முதல் திருமணம் !

May 25, 2020 தண்டோரா குழு

கோவை தேவாலயத்தில் ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் முககவசம்,அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்து கிறிஸ்துவ திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றன.இதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவலாயத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திருமணம் நடைபெற்றது. ஆலன் மில்ட்டன், மார்க்கிரேட் ஜெசிந்தா ஆகியோருக்கு அத்தேவலாயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் திருமணம் செய்து வைத்தார்.மணமக்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் முகக்கவசம் அணிந்தபடி திருமணத்தில் பங்கேற்றனர்.

IMG-20200525-WA0096

பிரார்த்தனை பாடல் இசைக்கப்பட்ட போது, திருமணத்தில் பங்கேற்றவர்கள் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே, திருமணத்தில் பங்கேற்றவர்கள் தேவலாயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.இதில் பங்கேற்றவர்கள் மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

மேலும் படிக்க