• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள பணியாளர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்தல் பயிற்சி

March 5, 2021 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பணிக்காக மொத்தம் 21 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.இவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடக்க உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவையில் 4 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கோவையில் தேர்தல் பணியில் மட்டும் 21 ஆயிரத்து 500 அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

‘‘வரும் 14 ம் தேதி பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அத்தொகுதிகளுக்குட்பட்ச கல்வி நிறுவனம் ஒன்றில் தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பெட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தி பயிற்சி அளிக்கப்படும்,” என்றனர்.

மேலும் படிக்க