• Download mobile app
12 Dec 2025, FridayEdition - 3593
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு – 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று ஒரே நாளில் 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இன்று 52 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் இன்று ஒரேநாளில் 256 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 969 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க