கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதுஅறிவியல் விலங்கியல் மற்றும் ஆய்வுத்துறை, வனவிலங்கு உயிரியல் துறை ஆகியன கொல்கத்தா, இந்திய விலங்கியல் ஆய்வகத்துடன் இணைந்து நடத்தும் “மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை” என்னும் பொருண்மையிலான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராகச் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கோயம்புத்தூர், மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியின் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் முதல்வா் வி. திருநாவுக்கரசு ஐ.எஃப்.எஸ்.பங்கேற்றார்.
அவா்தம் உரையில், “மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்குப் பெரும் சவாலாகக் கட்டடங்களின் பெருக்கம் அமைகிறது. வனவிலங்குகள் செல்லும் வழித்தடங்களில் கட்டடங்களைக் கட்டுவதால் மனித, விலங்கு மோதல் ஏற்படுவதுடன் விலங்குகளுக்கான உணவு, நீா் ஆகியவை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை 160 வகையான அந்நியக் களைச் செடிகள் ஆக்கிரமித்துள்ளன என்றும் அதனால் நம்முடைய மண் சார்ந்த தாவரங்கள் பெரும் அழிவிற்கு உள்ளாகின்றன என்றும் குறிப்பிட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர்ப் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசின் கொள்கைகளும் தன்னார்வ அமைப்புக்களின் துணையும் மட்டும் போதாது என்றும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
இக்கருத்தரங்கில் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். சென்னை, பாம்பு பூங்கா அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவா் எஸ். பால்ராஜ் ஐ.எஃப்.எஸ். வாழ்த்துரை வழங்கினார். கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் பி.எஸ். ஈசா அவா்களும் மத்தியபிரதேச மாநில முன்னாள் தலைமை வனப் பாதுகாவலா் முனைவா் திலீப்குமார் ஐ.எஃப்.எஸ். அவா்களும் கருத்தரங்க நோக்கவுரையாற்றினா்.
முன்னதாக, கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. சங்கீதா வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறையின் பேராசிரியருமான எஸ். இராஜா கருத்தரங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கின் ஆய்வுச் சுருக்க நூலைச் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் கோயம்புத்தூர், மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியின் தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் முதல்வா் வி. திருநாவுக்கரசு ஐ.எஃப்.எஸ். அவா்கள் வெளியிட சென்னை, பாம்பு பூங்கா அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவா் எஸ். பால்ராஜ் ஐ.எஃப்.எஸ். அவா்களும் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி அவா்களும் பெற்றுக்கொண்டனா்.
மேலும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிக்கும் சென்னை, பாம்பு பூங்கா அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடக்க விழாவின் நிறைவில் விலங்கியல் துறை இணைப்பேராசிரியா் முனைவா் எஸ். பினுக்குமாரி நன்றியுரையாற்றினார்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து கருத்தரங்க அமர்வுகள், கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வுநிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சார்ந்த பேராளர்கள் பலா் பங்கேற்றனா்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு