• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆர் சிறப்பு நினைவு தபால் தலை வெளியிடு

January 17, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நூற்றாண்டுவிழாவையொட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புத் தபால் தலை, சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக அரசு கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மறைந்த தமிழக முதல்வர் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நினைவுத் தபால் தலையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் நினைவு எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்புத் தபால் தலையை, தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலர் டி. மூர்த்தி வெளியிட தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க