• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 7 பேரை ஏப்ரல் 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

April 13, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கிண்டியில் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 7 பேரை ஏப்ரல் 25 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கத்திப்பாராவில் இயக்குனர் கவுதமன் தலைமையில் போராட்டம் நடத்திய மாணவர்கள்கத்திப்பாரா மேம்பாலத்தில், சங்கிலியால் மறித்து அவர்கள் பூட்டு போட்டனர். இதனால் கத்திப்பாரா மேம்பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில்,இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 6 பேரை வரும் 25-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க