• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் வளாகத்தில் 5-வது ஜூனியர் மற்றும் 10-வது சீனியர் பாரா ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2024

October 19, 2024 தண்டோரா குழு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம், தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் கோயம்புத்தூர் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, 5-வது ஜூனியர் மற்றும் 10-வது சீனியர் பாரா ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2024-ஐ அதன் கோவை வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

இந்நிகழ்வில் 16 பிரிவுகளில்,சுமார் 90 ஆண் மற்றும் 35 பெண் நீச்சல் வீரர்கள் உட்பட 125 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் 10, 2024 அன்று கோவாவில் நடைபெறவிருக்கும் தேசிய சாம்பியன்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் (பிசிஐ) துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகர், TNPSA-வின் பொதுச்செயலாளர் கிருபாகர இராஜா, CPSA அமைப்பின் செயலாளர் ஷர்மிளா இராமானந்த் மற்றும் அம்ருதா விஸ்வ வித்யாபீடம்,கோயம்புத்தூர் வளாகத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.மேனன் (ஓய்வு) பரிசு வழங்கும் நிகழ்வை நடத்தி வைத்து சிறப்பித்தனர்.

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் வளாகம்,மாவட்ட அளவில் ஒலிம்பிக்-தரமான நீச்சல் குளத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இதன் மூலம் அத்தகைய உயர்தர பாரா-விளையாட்டு நிகழ்வை நடத்துவதற்கான சிறந்த வளாகமாக அம்ருதா பல்கலைக்கழகம் அமைகிறது.

மேலும் படிக்க