• Download mobile app
22 Jun 2025, SundayEdition - 3420
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர செய்தல் தொடர்பான முதலாவது கருத்துக்கேட்பு கூட்டம்

    14 Tuesday 2021 தண்டோரா குழு

    தமிழகத்தில் 121 நகராட்சிகள் இருந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு புதியதாக 29 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்தார்.இதன் காரணமாக 121 நகராட்சிகளாக இருந்தது 150 ஆக உயர்ந்தது.

    புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சியில் கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி,மதுக்கரை ஆகிய 4 நகராட்சிகள் அடங்கும்.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர செய்தல் தொடர்பான முதலாவது கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் 4 நகராட்சியை சேர்ந்த முன்னால் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர், கிராம ஊராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் முன்னால் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர் மேலும் கிராம ஊராட்சி அலுவலர்கள் அவர்களது கருத்துக்களை பரிமாறினர்.