• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    2 Thursday 2021 தண்டோரா குழு

    கோவை பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

    இந்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்கள்,குரங்கு நீர் வீழ்ச்சி ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை அமலில் இருந்தது.

    இதற்கிடையில், தமிழக அரசின் ஒப்புதலோடு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.அதே சமயத்தில் டாப்ஸ்லிப்பில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங், யானை சவாரிகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கொரோனா மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற கோரியும் அறிவுறுத்தப்படுகிறது.