• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கொரோனா விதி மீறிய தனியார் விடுதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

    2 Thursday 2021 தண்டோரா குழு

    கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் தனியார் மாணவ-மாணவி விடுதிகளில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர்.

    கேரளாவில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டிருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மதுக்கரை தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தனியார் விடுதிகளை நேற்று ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது தனியார் விடுதிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?, கேரளா மாணவ, மாணவியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்களா? என பார்வையிட்டனர். அப்போது சீரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.