• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள் போராட்டம்

    2 Thursday 2021 தண்டோரா குழு

    கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க கோரி இந்து அமைப்புகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி மேற்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது‌.

    கொரனா பரவல் குறைந்திருக்கிறது தற்போதைய சூழலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் நடத்த வேண்டும் என இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரத்தில் விநாயகர் கோவில் முன்பு இந்து மக்கள் புரட்சிப்படை தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி மீறி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என தடுத்ததால் உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.

    மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தக்கூடாது என்ற ஹிந்து விரோத போக்கை திமுக அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டிய இந்து அமைப்பினர், இதே போக்கை தொடர்ந்து கடை பிடித்தால் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.