• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவையில் நான்கு மாத போலீஸ் தேடலுக்கு பின் சிக்கிய கொள்ளையர்கள் கைது ! -30 சவரன் நகை பறிமுதல்

    2 Thursday 2021 தண்டோரா குழு

    கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ சிறுவாணி ரோடு சாலையில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் ஆனந்தன். இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆனந்தம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு திண்டுக்கல் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது.மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த்து.

    இதுதொடர்பாக ஆனந்தன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த வடவள்ளி போலீசார் 4மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 குற்றவாளிகளை கைது செய்தனர். கைது செய்த குற்றவாளிகளிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.