• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

New News

  • புதிய செய்திகள்

    கோவை மாநகராட்சியின் உதவி பொறியாளர்கள் நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்

    9 Thursday 2021 தண்டோரா குழு

    கோவை மாநகராட்சி உதவி பொறியாளர்கள், இளம்பொறியாளர்கள் நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    கோவை மாநகராட்சி, பொறியியல் பிரிவில் மண்டலங்களில் பணியாற்றி வரும் இளம் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் தற்போது கவனித்து வரும் வார்டு பணிகளுடன் கூடுதலாக நகரமைப்பு பிரிவு தொடர்பான அனுமதியற்ற. அனுமதிக்கு மாறான கட்டிடங்களின் மீதான அறிவிப்பு சார்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகள், பொது இடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது ஒதுக்கீடு இடங்களை பாதுகாப்பு செய்வது, இடிபாடு நிலையில் உள்ள கட்டுமானங்களை கண்டறிந்து அறிவிப்பு சார்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனுமதியற்ற மனைப்பிரிவு மனையிடங்களில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள விபரத்தை கண்டறிந்து வரன்முறை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், கட்டிட அனுமதியின்படி கட்டுமானம் செய்யப்படுவதை அடித்தள கட்டுமானத்தின் போதே கள ஆய்வு செய்து உறுதிபடுத்துதல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளுக்குட்பட்ட நகரமைப்பு தொடர்பான வழக்குகளில் எதிர்வாதுரை மனு தாக்கல் செய்தல் மற்றும் தொடர் வழக்கு நடவடிக்கை தொடர்பான பணிகள் ஆகிய பணிகளை நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்”

    இவ்வாறு அவர் கூறினார்.