• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியின் உதவி பொறியாளர்கள் நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்

September 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி உதவி பொறியாளர்கள், இளம்பொறியாளர்கள் நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி, பொறியியல் பிரிவில் மண்டலங்களில் பணியாற்றி வரும் இளம் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் தற்போது கவனித்து வரும் வார்டு பணிகளுடன் கூடுதலாக நகரமைப்பு பிரிவு தொடர்பான அனுமதியற்ற. அனுமதிக்கு மாறான கட்டிடங்களின் மீதான அறிவிப்பு சார்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகள், பொது இடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது ஒதுக்கீடு இடங்களை பாதுகாப்பு செய்வது, இடிபாடு நிலையில் உள்ள கட்டுமானங்களை கண்டறிந்து அறிவிப்பு சார்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனுமதியற்ற மனைப்பிரிவு மனையிடங்களில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள விபரத்தை கண்டறிந்து வரன்முறை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், கட்டிட அனுமதியின்படி கட்டுமானம் செய்யப்படுவதை அடித்தள கட்டுமானத்தின் போதே கள ஆய்வு செய்து உறுதிபடுத்துதல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளுக்குட்பட்ட நகரமைப்பு தொடர்பான வழக்குகளில் எதிர்வாதுரை மனு தாக்கல் செய்தல் மற்றும் தொடர் வழக்கு நடவடிக்கை தொடர்பான பணிகள் ஆகிய பணிகளை நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க