• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகி பூரி ரெசிபி!

August 1, 2018 tamilsamayam.com

தேவையான பொருள்கள்:

ராகி மாவு – 1/2 கப்.
கோதுமை மாவு – 1/2 கப்.
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி.
லேசாக சூடு படுத்திய தண்ணீர் – 1/2 கப்.
உப்பு – தேவையான அளவு.
சுடுவதற்கு எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராகி மாவு,கோதுமை மாவு,ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய்,உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.அடுப்பில் கடாயயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூரிகளை ஒவொன்றாக போட்டு எடுக்கவும்.இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.சுவையான ராகி பூரி ரெடி.

மேலும் படிக்க