• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருமையான சுவையில் காளான் சமோசா செய்ய…!

July 31, 2018 தண்டோரா குழு

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1 1/2 கப்.
உப்பு – 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.
தண்ணீர் – தேவையான அளவு.

உள்ளே வைப்பதற்கான மசாலா செய்ய:

வெங்காயம் – 1 (நறுக்கியது).
பட்டன் காளான் – 300 கிராம் (பொடியாக வெட்டியது).
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்.
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது).
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்.
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்.
கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது).
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.
எண்ணெய் – தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,காளான்,பச்சை மிளகாய்,சீரகப் பொடி,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து,காளான் வேகும்வரை நன்கு வதக்க வேண்டும்.பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி,குளிர வைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு உருண்டையை எடுத்து,வட்டமாக தேய்த்து,அதனை பாதியாக வெட்டி,ஒரு பாதியை கூம்பு போல் செய்து,அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி,சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான அருமையான காளான் சமோசா தயார்.

மேலும் படிக்க