• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசகுல்லா

October 13, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பால் – 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 மற்றும் 3/4 கப்
சர்க்கரை – 3/4 கப்
பாதாம், பிஸ்தா- தேவையான அளவு

செய்முறை :

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.பால் நன்கு கொதித்தது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் திரியும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

பாலில் இருந்து தண்ணீர் பிரிந்ததும், அதனை மெல்லிய துணியில் போட்டு தண்ணீர் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும்.தண்ணீர் வடிந்ததும், திரிந்த பாலை தனியர் எடுத்து அதனை மென்மையாக பிசைய வேண்டும்.அடுத்தது பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி கொள்ளவும்.

பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.சர்க்கரை தண்ணிரில் கரைந்து சிறிது கெட்டியான பின்னர் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை அதில் போடவும்.

முதலில் குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.இறுதியாக சர்க்கரை நீரில் போட்ட திரிந்த பால் உருண்டைகள் வெந்ததும் அதனை குளிர வைத்து சிறிது அலவு பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி பரிமாறலாம்.

குறிப்பு:

10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கும் போது 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க