• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு

November 10, 2017

தேவையானப்பொருட்கள்:

முருங்கைக்கீரை – ஒரு கட்டு
பயத்தம் பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் – 2
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் – 2 (பொடியாக).

செய்முறை:

முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வேக விடவும். ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க