• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீன் பிரியாணி

September 11, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – இரண்டு கப்.

தக்காளி விழுது – ஒரு கப்.

தேங்காய் பால் – ஒரு கப்.

தண்ணீர் – இரண்டு கப்.

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்.

கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்.

முள் நீக்கிய மீன்துண்டுகள் – பத்து.

இஞ்சி – சிறுதுண்டு.

பூண்டு – எட்டு பல்.

தயிர் – ஒரு கப்.

பச்சை மிளகாய் – நான்கு.

கொத்தமல்லி இலை – ஒரு கப் (நறுக்கியது).

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்.

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது).

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்.

உப்பு – தேவைகேற்ப.

ஊற வைக்க:

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். இந்த விழுதில் மீனை புரட்டி ஊற வைக்கவும்.

செய்முறை

ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரிசியை மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். தக்காளி விழுது, தேங்காய்பால், தண்ணீர் ஒன்றை கப் சேர்க்கவும். உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும். பாத்திரத்தை மூடி அரிசியை வேக வைக்கவும். குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும் என்பது சதவிதம் வெந்தால் போதும் (குழையாமல் பார்த்துக் கொள்ளவும்).

மீன் செய்முறை

ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். மசாலாவில் ஊற வைத்த மீனை சேர்த்து சிறிது நீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும். வேக வைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க