• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்ய…!

November 3, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 கப்.
வெல்லம் – 2 கப்.
பொடித்த ஏலக்காயம் – கால் டீஸ்பூன்.
சுக்கு தூள் – 1 டேபிள்ஸ்பூன்.
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
எண்ணெய் – பொறிப்பதற்கு.

செய்முறை:

அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பாகு செய்ய:

அடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் (கால் டம்ளர்) தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள்.வெல்லம் நன்றாக கரைந்ததும்,மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும்.பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறிய,ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள்.அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.சரி,பாகு வந்ததும்,இறக்கி விடுங்கள்.பிறகு அதில்,அரிசி மாவையும்,ஏலக்காய்,சுக்கு தூள் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி,பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.சாப்பிட்டுப் பாருங்க,அதிரசம் சுவையாகவும்,மிருதுவாகவும் அருமையாக இருக்கும்.

மேலும் படிக்க