• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈரல் பெப்பர் ப்ரை

January 22, 2018

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈர‌ல் – கால் கிலோ
வெங்காயம் – 3
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – ‌சி‌றிதளவு
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
தனியாதூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
சீரக தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – 3/4 தேக்கரண்டி (தேவைக்கு)
பச்ச மிளகாய் – ஒன்று
கொத்து மல்லி தழை – சிறிது
எண்ணை – நான்கு தேக்கரண்டி
பட்டை – ஒரு சிறிய துண்டு

செய்முறை:

ஆட்டு ஈரலை நன்கு சுத்தம் செய்து கழுவி தேவையான அள‌வி‌ல் நறு‌க்‌கி எடு‌த்து வை‌க்கவு‌ம். வெங்காயம் மற்றும் தக்காளி, ப‌ச்சை ‌மிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாண‌லியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய பட்டை போட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வக்கவும். ‌பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ஈர‌ல் ம‌ற்று‌ம் எல்லா தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி குறைந்த தீயில் வேகவிடவும். நன்கு வெந்தது‌ம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொத்துமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

மேலும் படிக்க