September 6, 2017
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெங்களூருர் ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் முன் வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.இதுக்குறித்து பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கவுரி லங்கேஷ், ‘லங்கேஷ் பத்திரிகே’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரையும் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பல்வேறு பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.