• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும் – டிடிவி தினகரன்

August 30, 2017 தண்டோரா குழு

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“தமிழக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும். பொதுகுழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலருக்கு உண்டு.அவர்கள் கூட்டும் பொது குழு செல்லாது. அணிகள் இணைந்தாலும் பொதுச் செயலர் சசிகலா தான்.

முதல்வரும், துணை முதல்வர் அமைச்சர்களும் மத்திய அரசிடம் தவறான தகவலை கொடுத்து வருகின்றனர்.தமிழக மக்களுக்கு சரியான ஆட்சி, துரோக சிந்தனை இல்லாத நபர் தேர்வு செய்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்.கட்சி எங்கள் பக்கம் தான் உள்ளது, கட்சியை பலப்படுத்திவிட்டேன். துரோகிகளை நீக்குவது தான் எங்களது வேலை.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க