• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் – உயர்நீதிமன்றம் உத்தரவு

September 4, 2017 தண்டோரா குழு

நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடடையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.

உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடந்த திமுக சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது.

இவ்வழக்கில், கடந்த 1ம் தேதி(செப்.,1) தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதி வராததால், அன்று தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் இந்திரா பேனர்ஜி தலைமையிலான அமர்வு நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் தொடர்பாக அறிவிக்கையை செப்டம்பர் 18க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க