• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்

September 2, 2017 தண்டோரா குழு

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் ரயில் மறியல் நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சென்னையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும் இடம் அருகே மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அதைப்போல் அண்ணாசாலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது மத்திய அரசு உடனே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று முழக்கமிட்டும் அவர்கள் கோஷமிட்டனர்.இதனால் அண்ணாசாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடு்பட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் கொரடாச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கோவை

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கோவையில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ரயில் மறியல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சேலம், ஈரோடு ,மதுரை உட்பட அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க