• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா, அடி வாங்குனவன் நிலைமை?” சந்தானத்தை கிண்டலடித்த ஆர்யா

October 14, 2017 தண்டோரா குழு

சந்தானம் சமீபத்தில் நடந்த வழக்கறிஞருடான அடிதடி சண்டை மூலம்,ஆக்சன் ஹீரோவாக உருவாகிவிட்டதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானத்திற்கும் பாஜக பிரமுகர் ஒருவருக்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சனை மோதலில் முடிந்தது. இதையடுத்து, சந்தனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது முன் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “சக்கப்போடு போடு ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் சந்தானம்,ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் ஆர்யா,

நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் எப்படி ஆக்சன் ஹீரோவாக நடிக்க முடியும் என்ற சந்தேகம் முன்பு இருந்ததாகவும், இப்போது அது நீங்கிவிட்டதாகவும் நகைச்சுவையாக கூறினார். அதற்கு காரணம் அண்மையில் நடந்த நிஜமான சண்டை தான் என்றும் நடிகர் ஆர்யா குறிப்பிட்டார். மேலும், அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா, அடி வாங்குனவன் நிலைமை? என கிண்டலாக கூறினார்.

மேலும் படிக்க