கடும் வெயில் காரணமாக ராம்சரண் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா- & சமந்தா நடித்து வரும் தெலுங்கில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் உள்ள பொது இடங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதியில் கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த அனல் பறக்கும் கடும் வெயிலால் ராம்சரண், சமந்தா, அனுபமா, பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி மொத்த படக்குழுவும் ரொம்பவே அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, தற்காலிகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.
மேலும், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த மித்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம், தற்போது பட வெளியீட்டை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி