• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன்2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

August 28, 2018 தண்டோரா குழு

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி,நயன்தாரா,அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும்,மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் இப்படம் பெரும் சாதனை படைத்தது.இதுமட்டுமின்றி இப்படம் இயக்குநர் மோகன் ராஜாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இயக்குனர் மோகன்ராஜா இதற்கு நன்றி தெரிவித்தும்,தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.அது தனி ஒருவன் இரண்டாம் பாகம் தானாம்.அதிலும்,ஜெயம் ரவியே ஹீரோவாக நடிக்கவுள்ளார் என மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க